Friday, June 22, 2012

இவர் ஒருவரே தேவனானவர்

என்னுயிர் நண்பன்
தூரமாய் போகையில்
இவர் என்
அருகில் இருந்தவர்.

ஆபத்தில் அவன்
மறைந்து போகையில்
என்னருகில் எனக்கு
துணையாய் நின்றவர்.

என் வாழ்வின்
ஜீவனாய் வந்தவர்
என் தாழ்வில்
உயர்வு தந்தவர்.

எனக்காய்
யாவையும் செய்தவர்
தன் உயிரையும்
எனக்காய் மாய்த்தவர்.

இன்றும் எனக்காய்
இருப்பவர்
என்னிதயத்தில் வசிக்கும்
இயேசுவே இவர்!

இவர்,
அன்பின் சிகரமானவர்
பொருமையின் எல்லையானவர்
மகிமையில் மகத்தானவர்
வல்லமையில் சர்வ வல்லவர்.

என்னவென்று சொல்ல
இவரை?
இவர் ஒருவரே
தேவனானவர்!!

www.WordOfGod.in
www.ChristiansMobile.com

No comments:

Post a Comment