தீங்கு நாட்கள்
வராததற்கு முன்னும்,
நான் வெறுக்கும் வருஷஙள்
என்னை தொடராததற்கு முன்னும்,
உலகமும் அதிலுள்ளவைகளும்
என்னை மயக்கும் முன்னும்
உலக கவலைகள் என்னை
பிடிக்கும் முன்னும்
என் கால்கள் இரண்டும்
பெலனற்று போகும் முன்னும்
என் புயங்கள் தன் பெலவீனத்தை
அறிந்துக்கொள்ளும் முன்னும்
என் மூச்சுக்காற்றின் வேகம்
லேசாக குறையும் முன்னும்
என் சிந்தனை திறன்
சோர்ந்துபோகும் முன்னும்
நாடி நரம்புகள்
ஆடி அசைந்துபோகும் முன்னும்
நான்கேழு வருடங்கள்
என் வயதை தொடும் முன்னும்
உலக சிநேகத்தில்
நான் மயங்கும் முன்னும்
உலக மனுஷர்களில் எனக்கு
அருமையானவர்களை இழக்கும் முன்னும்
தேவனே உம்மை நினைக்கிறேன்..
துள்ளித் திரியும் என் இளமை
காலத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன்!
தூய என் பரிசுத்த வாலிபத்தை
உமக்கே அர்ப்பணிக்கிறேன்
இனி,
என் ஆவி ஆத்துமா சரீரம்
உமக்கே!
உமக்கொருவருக்கே!!
நீர் அனுப்பும் இடம் நோக்கி
என் கால்கள் செல்லட்டும்
நீர் விரும்பும் செயலை
என் கைகள் செய்யட்டும்
நீர் சொல்லும் சொற்களையே
என் வாய் பேசட்டும்
நீர் விரும்பும் வண்ணமே
என் ஜீவன் வாழட்டும்!
இப்படிக்கு,
நீர் விரும்பும்படி வாழ விரும்பும் வாலிபன்
www.WordOfGod.in
www.ChristiansMobile.com
No comments:
Post a Comment